சென்னை:
நடிகர் திலகம் நடித்த படத்தின் தலைப்பு இப்போது விஷால் கையில் போய் சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எந்த படம்...என்ன தலைப்பு என்கிறீர்களா? விஷால் தற்போது ‘கத்திசண்டை’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’, லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி-2’, திரு இயக்கத்தில் புதிய படம் என்று அவருக்கு வரிசைக்கட்டி படங்கள் நிற்கின்றன.
இந்நிலையில் பி.எஸ்.மித்ரன் என்ற அறிமுக இயக்குனரின் இயக்க ஒரு படத்தை சொந்தமாக தயாரிக்கிறாராம் விஷால். இந்த படத்திற்குதான் நடிகர் சிவாஜி நடித்த ‘இரும்பு திரை’ படத்தலைப்பை வைக்க உள்ளாராம்.
ஜெமினி நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.