சென்னை:
அடப்பாவிங்களா... யாருய்யா இப்படி செய்தது என்று நொந்து போய் கிடக்கிறார் "கபாலி" தன்ஷிகா.


விஷயம் என்னன்னா? கபாலி படத்தில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்தவர் தன்ஷிகா. இவர் தற்போது ராணி என்ற சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் கதையில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது.


இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கும், ஹோட்டலுக்கும் தன்ஷிகா சென்று வர ரூ.2 கோடி ரூபாய் மதிப்பு சொகுசு காரை தயாரிப்பு தரப்பு கொடுத்துள்ளனர். 


வழக்கம்போல் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு செல்ல காரை தேடியபோது யாரோ அதை திருடிச் சென்று விட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தன்ஷிகா உடனே தயாரிப்பாளரிடம் சொல்ல, அவர் ஐலேண்ட் போலீசில் புகார் செய்துளளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: