சென்னை:
ஒரு படம்தாங்க... பதிவேற்றினார்... செம மோசமான கமெண்டுகளால் நொந்து போய் இருப்பார். யார் என்று தெரியுங்களா?


எவ்வளவோ செய்துட்டோம் இதை செய்யமாட்டோமான்னு கேட்டு நம்மை நோகடித்த அதே பிரேம்ஜிதான். பிரேம்ஜி, வெங்கட் பிரபு இருவரும் இணைந்தாலே கொண்டாட்டம் தான்.


அதிலும் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்த எல்லாம் நடிகர்களும் சேர்ந்தால்... கலாட்டாவிற்கு கேட்கவா வேண்டும்.


சமீபகாலமாக கோவில் கோவிலாக சுற்றிய இவர்கள் தற்போது ஐயப்பன் கோவிலுக்கு செல்ல இருக்கின்றனர்.


இவர்கள் மாலைபோட்டு எடுத்த ஒரு புகைப்படத்தை பிரேம்ஜி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்ற... அவ்வளவுதான் ரசிகர்கள் கமெண்டுகளால் குதறி எடுத்து விட்டனர். 


வருஷம் முழுவதும் இப்படியே இருங்க, எந்த படத்துக்கு இப்படி ஒரு வேஷம். ஊர்ல இருக்குற குடிகாரர்கள் எல்லாம் சபரிமலை போனா அய்யப்பன் மலையை விட்டு ஓடி விடுவார் என்று கடுமையான, வார்த்தைகளால் கமெண்ட்டுகள் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர். இதனால் இந்த குரூப் இப்போ சைலண்டோ... சைலண்ட்டாம்...


మరింత సమాచారం తెలుసుకోండి: