சென்னை:
எடுக்கணும்... ரெஸ்ட் எடுக்கணும்... மகன் அன்பு கட்டளை போட அதை ஆசையோடு ஏற்றுக்கொண்டுள்ளார் தந்தை. யாருன்னு தெரியுங்களா?


வேறு யார்? பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்தான் அந்த தந்தை. அந்த அன்பு மகன் விஜய்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக கேரளாவில் இருந்த போது பாத்ரூமிலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார் எஸ்.ஏ.சி.


அங்கேயே சிகிச்சை பெற்று வந்த அவர் சமீபத்தில் தான் சென்னை திரும்பினார். உடனே படப்பிடிப்புக்கு போகணும் நினைத்தவருக்கு விஜய் போட்டார் அன்பு கட்டளை. நீங்க கொஞ்ச காலம் வீட்டுலயே ரெஸ்ட் எடுங்க என்று சொல்ல மகனின் வார்த்தைகளை தட்ட முடியாமல் அதை ஏற்றுக் கொண்டு ரெஸ்ட் எடுத்து வருகிறாராம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: