சென்னை:
அங்கு வேண்டாம்... அங்கு வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தாராம் அஜித் என்று கோலிவுட் கோகிலாக்கா தகவல் சொல்லியிருக்காங்க.


என்ன விஷயம் தெரியுங்களா? அஜித், சிறுத்தை சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வருகிறார். இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வருகிறது.


இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை, இயக்குனர் சிவா சென்னை ஈவிபி யில் செட்டு போட்டு நடத்தலாம் என்று அஜித்திடம் தெரிவித்துள்ளார்.


ஆனால் இதற்கு அஜித் மறுப்பு தெரிவித்துள்ளாராம். ஏன் தெரியுங்களா? அதே இடத்தில் தான் 2.0 படத்தின் படப்பிடிப்பும் நடக்கிறது. இதனால் தனக்கு பிரைவசி இருக்காது என்று எண்ணி ஐதராபாத்தில் உள்ள ராமராவ் பிலிம் சிட்டியில் 2ம் கட்ட படப்பிடிப்பை நடத்தலாம் என்று கோரிக்கை வைத்தாராம் அஜித் .


"தல" சொன்னா கேட்டுக்கணும் இல்ல... தற்போது அங்கு படத்துக்கான செட் வேலைகள் நடக்கிறதாம்... நடக்கிறதாம். 



మరింత సమాచారం తెలుసుకోండి: