தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படுகிற படம் தான் 'வி.ஐ.பி-2'. முதலில் ஜூலை-28ஆம் தேதி இந்தப்படம் வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் தற்போது வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது என புதிதாக மறு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு ஆகிய  மூன்று மொழிகளிலும் வெளியாவதால் இந்தப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் தனுஷ், கஜோல், சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகிய மூன்று பேரும் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

Image result for dhansh throwing mic



இந்தநிலையில் தெலுங்கின் முன்னணி சேனல் ஒன்றில் தனுஷிடம் நேர்காணலுக்கு ஏற்பாடுகள் செயப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் நேர்காணல் செய்த பெண் தொகுப்பாளினி, 'வி.ஐ.பி-2' படம் குறித்த தகவல்களை கேட்பதை விடுத்து, தனுஷின் சொந்த வீட்டு விஷயங்கள், குறித்தே திரும்ப திரும்ப கேள்விகளை கேட்டார். குறிப்பாக, தனுஷ் பற்றி வெளியான சுஜிலீக்ஸ் படங்கள், தனுஷின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை மற்றும் சமீபத்திய தெலுங்கு சினிமாவின் போதைப்பொருள் சர்ச்சை குறித்தெல்லாம் பேட்டியின் முதல் கட்டத்திலேயே கேள்விகளை கேட்க ஆரம்பித்தார் அந்த தொகுப்பாளினி.

ஆரம்பத்தில் சற்றே பொறுமை காத்த நல்ல மனசுக்காரன் தனுஷ், ஒருக்கட்டத்தில் கோபத்துடன் மைக்கை உருவி தூக்கி எறிந்துவிட்டு, பேட்டியின் இடையிலேயே எழுந்து சென்றார். பின்னர் சேனல் நிர்வாகம் அவரிடம் மன்னிப்பும்  வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து மீண்டும் அந்த பேட்டியில் தொடர்ந்து பங்கேற்றார். ஆனாலும் அந்த பேட்டி முழுதும் தனுஷ் ஒருவித இறுக்கத்துடனேயே எரிச்சலுடனே  பதில் அளித்தார் என்பது நன்றாகவே தெரிந்தது. இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வாட்சாப்பில் பரபரப்பாகிறது .


మరింత సమాచారం తెలుసుకోండి: