தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு செருப்படி போல் பதிலடி கொடுக்கும் வகையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அதே நேரத்தில் அங்கிருந்த பெர்லின் நகரில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்தார். இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

ஹாலிவுட் படமான பேவாட்ச்சை விளம்பரம் செய்ய பிரியங்கா பெர்லின் சென்றுள்ளார்பிரதமர் மோடியை பெர்லினில் சந்தித்ததை பிரியங்கா சோப்ரா சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்தார். மேலும் மோடியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டார்.

கால் தெரியும்படி உடை அணிந்து பிரதமர் முன்பு அதுவும் கால் மேல் கால் போட்டு மரியாதை இல்லாமலா உட்கார்ந்திருப்பது என்று நெட்டிசன்கள் பிரியங்காவை மிகவும் வறுத்தெடுத்தனர். கால் தெரியும்படி உடையணிந்ததை பார்த்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தானும், தனது தாயும் கால் தெரியும்படி உடையணிந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இது எங்கள் பாரம்பரிய ரத்தத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார் பிரியங்கா.
click and follow Indiaherald WhatsApp channel