களவாணி ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு தான் பிரபலமாகி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எல்லா வயதினரையும் கவர்ந்து அதிக வாக்குகள் பெற்றுள்ள ஓவியாவுக்கு திரையுலகினர் பலரும் பெரும் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதோடு, சில டைரக்டர்களும், நடிகர்களும் ஓவியாவுக்கு தங்களது சொந்த படங்களில் வாய்ப்பு கொடுக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பல படங்கள் ஓவியாவுக்கு வரிசையாக புக்காகும் நிலை உருவாகியிருக்கிறது.

ஏற்கனவே மெட்ரா பட நாயகன் சிரிஷ்
உருவாகும் புதிய
படத்தில் ஓவியாவுக்கு சான்ஸ் கொடுக்கயிருப்பதாக கூறியுள்ள நிலையில், தற்போது யாமிருக்க பயமேன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் செல்ல
ஓவியாவை நடிக்க
வைக்க முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாகத்தில் சிறிய வேடத்தில் நடித்த ஓவியாவுக்கு இரண்டாம் பாகத்தில் வெயிட்டான ஒரு நல்ல வேடம்
கொடுக்கப்பட உள்ளதாம். இதையடுத்து விஜய்சேதுபதியை வைத்து பாலாஜி தரணீதரன் இயக்கும் படத்திலும் ஓவியாவை புக் பண்ணபோவதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

click and follow Indiaherald WhatsApp channel