
பண்ணையாரும் பத்மினியும் அனைவராலும் பாராட்டப்பட்டாலும் ஓடவில்லை, என்பதால் மீண்டும் இவருடன் இனைந்து செய்த சேதுபதி போலீஸ் வேடத்தில் மாஸாக வந்து சூப்பர்ஹிட் ஆனது. இருந்தும் கூட அருண்குமாருக்கு யாருமே வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதால் மீண்டும் மக்கள் செல்வனுடன் இணைந்த படம் தான் சிந்துபாத்.

இறைவி படத்தை அடுத்ததாக அஞ்சலி மீண்டும் ஜோடியாக நடிக்க, விஜய் சேதுபதி மகன் சூர்யா அவரது மகனாக படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் சேதுபதி மற்றும் அதே கண்கள் புகழ் லிங்கா வில்லனாக நடிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிந்துபாத் மே மாதம் வெளியாகவுள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel