'முத்தின கத்திரிக்காய்' திரைப்படத்திற்கு பிறகு சுந்தர் சி அடுத்து 'ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம்' தயாரிக்கவுள்ள 100-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'சங்குமித்ரா' என்பது தலைப்பு. 350-கோடி பொருட்செலவை கொண்டு இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் உருவாகவுள்ளன. 


தற்போது வெளிவந்த உண்மை தகவலில், சங்குமித்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு, அமெரிக்கா, டென்மார்க், உக்ரைன் உள்ளிட்ட 11 நாடுகளில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 


மேலும் இந்த படத்தில் விஜய் ஹீரோவாக நடிப்பார் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகார பூர்வத்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


மேலும் 'சங்குமித்ரா' திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். கமலக்கண்ணன் சவுண்ட் என்ஜினீரியாக பணியாற்றவுள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: