இஸ்தான்புல்:
துருக்கி நாட்டின் ஹக்காரி மாகாணத்தில் ராணுவ முகாம் மீது போராளிகள் தாக்குதல் நடத்த, சுதாரித்து கொண்ட ராணுவ வீரர்கள் கொடுத்த பதிலடியில் 35 போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிர்ச்சியை ஏற்படுத்தி சம்பவத்தின் விபரம் இதுதான்.


துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியான ஹக்காரி மாகாணத்தில் ராணுவ முகாம் உள்ளது. இங்கு திடீரென வந்த 50க்கும் அதிகமான குர்திஸ்தான் போராளிகள் அதிரடியாக தாக்குதல் நடத்த தொடங்கினர். இதை எதிர்பார்க்காத ராணுவ வீரர்கள் சில விநாடிகளில் சுதாரித்துக் கொண்டனர். 


இதையடுத்து ராணுவ வீரர்கள் நடத்திய எதிர் தாக்குதலில் 35 போராளிகள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


మరింత సమాచారం తెలుసుకోండి: