இயக்குனர் செல்வராகவன் உருவாக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. 


திகில் கதையை கொண்டு உருவான இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா காசன்றா, நந்திதா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஒன்றாக என்டேர்டைன்மெண்ட்ஸ் சார்பில் கவுதம் மேனன் இந்த படத்தை தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.


இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது பின்தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. இந்நிலையில் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 2-ந்தேதி, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு,  திரையரங்கில் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.


எனினும் இதுகுறித்த அதிகார பூர்வத் தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: