பெங்களூர்:
பெங்களூரில் தனியார் பஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்களுக்கு தீ வைத்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.


பெங்களூரில் கடந்த திங்கட்கிழமை கன்னடர்கள் நடத்திய வன்முறையின் போது டிசௌசா நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கே.பி.என். நிறுவனத்துக்கு சொந்தமான 42 பஸ்கள் வன்முறையாளர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டது.


பெங்களூரில் உள்ள 9 தீயணைப்பு வண்டிகள் இந்த தீயை சுமார் 4 மணி நேரம் போராடி அணைத்தன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


இது தொடர்பாக கே.பி.என். நிறுவன டிரைவர்களில் ஒருவரான வெங்கடாசலம் பெங்களூர் போலீசில் புகார் செய்ய...  போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


சுமார் 200 பேர் இந்த தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டதால், தீ வைத்தது யார் என்பதை கண்டுபிடிப்பது பெரும் சிரமமாக இருந்தது.


தீவிர விசாரணையில் பஸ்களுக்கு தீவைத்த 7 பேர் 7 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை அனைவரையும் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைத செய்துள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: