புதுடில்லி:
இந்தியாவே அதிர்ந்துதான் போய் உள்ளது இந்த சம்பவத்தை கேட்டும், பார்த்தும் என்றுதான் சொல்ல வேண்டும். பெண்கள் மீதான தாக்குதல்களில் இது உச்சக்கட்டம் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.


தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலையின் தாக்கமே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் மற்றொரு அதிர்ச்சி என்பதை விட உச்சபட்ச அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது டில்லியில் நடந்துள்ள ஒரு சம்பவம்.

சுவாதி கொலை

Image result for swathi murderer photo

டில்லியில் ஆசிரியராக பணிபுரிந்த இளம் பெண் ஒருவரை வாலிபர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தும் பின் தொடர்ந்து பல தொல்லைகள் கொடுத்து வந்துள்ளார் அந்த வாலிபர்.


இதையடுத்து அந்த வாலிபர் குறித்து பெண்ணின் பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் செய்தனர்.  இதையடுத்து அந்த வாலிபரை அழைத்து போலீஸார் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் டில்லி ரயில் நிலையம் அருகே  அந்த பெண்ணிடம் தகராறு செய்த அந்த வாலிபர் அடுத்ததாக செய்ததுதான் மிகவும்... கொடூரச் செயல்.


தகராறில் ஈடுபட்ட அந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென குத்த ஆரம்பித்தார். சரமாரியாக கத்திக்குத்து விழுந்ததில் அந்த பெண் தடுமாறி கீழே விழுந்தார். 


மக்கள் நடந்து சென்ற போதிலும் அந்த வாலிபரை தடுக்க முயலவில்லை. தன் வெறி அடங்காத அந்த வாலிபர் மீண்டும்... மீண்டும் என்று 24 முறை அந்த பெண்ணை குத்தி கொன்றார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இக்கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் முழுவதும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: