மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிரமாண்டமான நினைவு மணி மண்டபத்தைத் திறந்து வைக்கக பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகை தர இருக்கிறார். பிரதமருக்கு அளிக்க வேண்டிய பூனைப் படை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.

Image result for abdul kalam memorial


மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுக்கு அவரை நல்லடக்கம் செய்த பேய்க்கரும்பு என்னுமிடத்தில் பிரமாண்டமாக நினைவு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. மத்திய அரசு அந்த மண்டபத்தை  15 கோடி ரூபாய் செலவில் கட்டி முடித்துள்ளது.

Image result for abdul kalam memorial


பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தை இந்த மாதம் வரும் ஜூலை 27ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்க உள்ளார். மோடியின் இந்த  வருகையை ஒட்டி அவருக்கு பூனைப்படை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி பிரதீப் குமார் மற்றும் எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் நினைவு மண்டபத்தை நேரில் பார்வையிட்டு ஆலோசனை செய்தனர். ஜெயலலிதா மறைவுக்கு வந்த மோடி, தற்போதுதான் தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: