சென்னை:
கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க, அதிகரிக்க மேட்டூருக்கு 1000 கனஅடி தண்ணீரை திறந்து விடுகின்றனர்.


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் செம மழை. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை சும்மா கிடுகிடுன்னு உயர்ந்துக்கிட்டே வருது. இப்போ வினாடிக்கு 15000 கன அடியாக தண்ணீர் வரத்து உயர்ந்துள்ளது.


இப்படியே போனால் இன்னும் 10 நாள்... 10 நாள்தான் இந்த அணையின் முழு கொள்ளளவும் நிரம்பி விடும். இந்நிலையில் இங்கிருந்து மேட்டூருக்கு 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடறாங்க... விடறாங்க... கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பினால் மேட்டூருக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் வருணபகவானை வேண்டுகின்றனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: