நடிகை ஜோதிகா மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களுக்கு காம்பேக் கொடுத்தார். முப்பத்தி ஆறு வயதினிலே என்ற அந்த ரீமேக் படம் சூப்பர்ஹிட் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவெடுத்தார்.



குற்றம் கடித்தால் படத்தை இயக்கிய பிரம்மாவின் இயக்கத்தில் இவர் நடித்த படமான மகளிர் மட்டும் சென்ற ஆண்டு வெளியானது. ஆனால் படமோ சுமாராக தான் போனது. ஜோதிகா தனது படங்களில் போலி பெண்ணியம் பேசுவதாக வேறு குற்றச்சாட்டுகளும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களும் அதிகம் ஆகின. இந்நிலையில் தான் இந்த ஆண்டு இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்தார் ஜோதிகா.



பாலாவின் நாச்சியார் படத்தில் ஒரு ஸ்ட்ரிக்ட்டான கரடு முரடான காவல்துறை அதிகாரியாக நடித்தவர் அடுத்ததாக செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமியின் மனைவியாக நடித்தார். சமீபத்தில் அவரது அடுத்த படமான காற்றின் மொழி ரிலீசானது.



இந்த படத்தில் அவர் ரேடியோ ஜாக்கியாக மாறும் ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணாக நடித்து கலக்கி உள்ளார். ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த துமாரி சுலு படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக உள்ளதாக அனைவரும் கூறி வரும் நிலையில் படம் பல திரை அரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. இதன் மூலம் ஒரு சிறிய கேப்பிற்கு பிறகு மீண்டும் ஜோதிகா பழைய ஜோதிகாவாக திரும்பி விட்டார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: