சென்னை:
வதந்திகள் உயிரை எடுத்த போது பேரமைதி காத்த நம்ம கபாலி ஓய்வை முடித்துக் கொண்டு ஊருக்கு திரும்ப போறாராம். 


ஓய்வுக்காக சூப்பர் ஸ்டார் ரஜினி தன் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு பறந்தார். அப்புறம் நடந்தது எல்லாம் மனசு நொந்து போகும் செயல்கள்தான். அவருக்கு உடம்பு சரியில்லை என்ற வதந்தியை கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் உச்சக்கட்டமாக இறந்து விட்டார் என்று வந்த செய்திதான் ரசிகர்களை கவலையில் உச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் தமிழகமே பரபரத்து கிடக்க நலமாக இருக்கிறார் என்று குடும்பத்தினர் வாய்ஸ் கொடுத்தனர்.


இந்நிலையில் இன்னும் சில நாட்களில் "கபாலி" ரிலீஸ் ஆகும் நிலையில் ஓய்வை முடித்துக் கொண்டு எதற்கும் அஞ்சாத அந்த சிங்கம் தமிழகம் திரும்பி வருகிறாராம். வரும் 3-ந் தேதி சூப்பர்ஸ்டார் இந்தியாவிற்கு வந்துவிடுவார் என்று அவரது நெருக்கத்தில் உள்ள வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
வாங்க...வாங்க... நெருப்புப்பா.. நீங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: