சென்னை:
சண்டகோழி-2 ஆரம்பிக்க போகிறோம் என்று சொன்னவர்கள் பணிகளை கிடுகிடுவென்று ஆரம்பிக்க ஆரம்பித்து விட்டனர். என்ன முதல் பார்ட்டில் இருந்த மீராஜாஸ்மின் மிஸ்சிங். அவருக்கு பதில் யாரு தெரியுங்களா?


அச்சம் என்பது மடமையடா பட நாயகி மஞ்சிமா மோகன்தான் இவர். இவர் சிம்புவுடன் நடித்துள்ள இந்த படம் முடியும் நிலையில் சில சிக்கலை சந்தித்துள்ளது. ஆனால் இவருக்கு படங்கள் வாய்ப்புகள் மட்டும் குறையவே இல்லை. விக்ரம் பிரபு, விஷாலுடன் ஒரு படம் என்று பிசியா உள்ளார்.


தற்போது சண்ட கோழி-2க்கும் இவரையே கதாநாயகியாக புக் செய்துள்ளார்கள். சண்டகோழியில் தன் நடிப்பால் கவர்ந்த மீராஜாஸ்மினுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கிறதாம். அவருக்கு ஹீரோயின் சான்ஸ் மட்டும் மிஸ்சிங்.


మరింత సమాచారం తెలుసుకోండి: