சென்னை:
நானே சொல்றேங்க... வதந்திகளை நம்பாதீங்க என்று அவரே சொல்லிட்டார். அப்புறம் என்ன?


கபாலி வெற்றியிலிருந்து இன்னும் ரஞ்சித் வெளியே வரவில்லை என்பதுதான் உண்மை. சமைக்கிறவங்க சொன்னாதானே என்ன சமையல் என்று தெரியும். வெளியில் நடந்து செல்பவர்கள் சொன்னால்... அதுபோலத்தான் பலரும் அடுத்து ரஞ்சித் நடிகர் சூர்யாவுடன் இணைகிறார்... விஜய்யுடன் இணைகிறார் என்று வதந்திகள் பரவ... இப்போ அதற்கு அவரே ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


இது குறித்து ரஞ்சித் கூறுகையில் ‘நான் இன்னும் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை, தற்போது தான் அடுத்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் உள்ளேன்.


விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நானே கூறுகிறேன்’ என்று சொல்லி அனைத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: