தமிழ்சினிமாவில் நடித்த எமி தற்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதே போல் தெலுங்கு நடிகை இலியானாவும் தற்போது பாலிவுட்டில் நடிக்க ஆர்வம் தெரிவித்து வருகிறார். 


இந்நிலையில் 'ஆடுகளம்' திரைப்படத்தில் நடித்து அறிமுகமான டாப்சீ, தற்போது ஹிந்தியில் அமிதாப் உடன் இணைந்து 'பிங்க்' என்ற பேய் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அவர் அடுத்தடுத்த ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். 


காஸி, தட்கா, ரன்னிங் ஷாதி டாட் காம், ஆக்ரா கா தாப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். அதனால் இலியாவும், எமியும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அவர்களுக்கு போட்டியாக, டாப்சீ ஹிந்தி சினிமாவில் உருவெடுத்திருப்பது தற்போது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் டாப்ஸியை பாலிவுட்டிலிருந்து வெளியேற்ற, அவர்கள் தற்போது தீவிர முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.


మరింత సమాచారం తెలుసుకోండి: