கராச்சி:
துப்பாக்கிக்கு இரையாகும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது பாகிஸ்தானில் பிரபல பாடகர் பலியாகி உள்ளார்.


பாகிஸ்தானில் பிரபல கவாலி இசை பாடகர் அம்ஜத் சாப்ரி என்பவர் மர்மநபர்களால் பரபரப்பான சாலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம்தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 


பாகிஸ்தானின் சப்ரி சகோதர்கள் குழுமத்தை சேர்ந்த பிரபல கவாலி பாடகர் அம்ஜத் சப்ரி (45). இவர் இன்று மதியம் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்களின் துப்பாக்கி வெடிக்க பாடகர் படுகாயமடைந்தார். 


மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் அம்ஜத் சப்ரி பரிதாபமாக இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: