ஜெய்ப்பூர்:
பரிதாபம்... அந்தோ பரிதாபம் என்பது போல் தொழிற்சாலைக்கு குழி தோண்டும்போது பக்கத்து சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியான சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. 


ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் மடாஸ்யா நகர் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள ஏரியா. இங்கு தொழிற்சாலை கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அருகில் உள்ள சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததில்... இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலியாகினர். ஒருவர் காயத்துடன் உயிர் தப்பினார். 


இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ராஜஸ்தானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: