மும்பை:
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தாதவரை இந்தியா-பாக்., கிரிக்கெட் நடக்கவே நடக்காது என்று கங்குலி சீறி பாய்ந்துள்ளார்.


இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கூறியதாவது:


“எல்லைதாண்டிய பயங்கரவாத சம்பவங்கள் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்ட வரலாறு உள்ளது. இப்படி பதற்றமான நிலையில் இருநாடுகள் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் குறித்து பேசுவது சிறப்பானதாக இருக்காது.


எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தாத வரையில் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இந்தியா-பாக்., கிரிக்கெட் போட்டி என்றாலே செம ஹாட்தான்... என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்களால் விளையாட்டும் ஸ்தம்பித்துள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: