பெங்களூரு :
அறுவை சிகிச்சை செய்யப்பட்ட 5 வயது குழந்தை கோமா நிலைக்கு சென்ற சம்பவம் கேள்விப்படும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


ஐந்தே வயது நிரம்பிய குழந்தை லக்சய். இக்குழந்தைக்கு கை விரல்களில் கடும் காயம் ஏற்பட்டது. உடன் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த 10-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


இனிதான் பிரச்னையின் வேர் தொடங்கியது. பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் குழந்தை கோமா நிலைக்கு சென்றுவிட்டான். அவனுக்கு இருதயக் கோளாறு இருந்ததே இதற்கு காரணம் என்றும் டாக்டர்கள் தெரிவிக்க உறைந்தே போய்விட்டார் குழந்தையின் தந்தை புருஷோத்தம்.


மனம் இதை மறுக்க புருஷோத்தம், அறுவை சிகிச்சைக்கு சற்று முன் கூட குழந்தை நன்றாக இருந்தான். குழந்தையின் இந்த நிலைக்கு டாக்டர்களின் அலட்சியம்தான் காரணம் என்று போர்க்கொடி பிடிக்க ஆரம்பித்து விட்டார். இந்த சம்பவம் குறித்து கேள்விப்படும் அனைவரும் அதிர்ச்சியில்தான் உறைந்து போய்விடுகின்றனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: