இன்றைய காலத்தில் பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனைகளுள் மாதவிலக்கும் ஒன்று. மாதவிலக்கு சரியாக வரவில்லை என்றால், நம் உடம்பில் ஹார்மோன்கள் சரியாக இயங்குவது இல்லை என்பது அர்த்தம். 


இது பல்வேறு நோய்களை வரவழைக்கும். எனவே இதற்கு முறையாக நாம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதை குணப்படுத்தும் மூலிகை உணவுகளை இப்போது நாம் பார்க்கலாம். 


தேவையான பொருட்கள் 


கழற்சி காய் - 3
நல்லெண்ணெய் - 25 ml 
நாட்டு கோழி முட்டை - 1 


கழற்சி காயில் இருக்கும் பருப்பினை பொடி செய்து, அதை நாட்டுக்கோழி முட்டையோடு கலந்து, நல்லெண்ணையில் ஆம்லெட் போட்டு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சரியாக வரும்.


தேவையான பொருட்கள் 


அன்னாசி பழத் துண்டுகள் - 1 கப் 
கருவேப்பிலை - 1 கப் 
கழற்சி காய் - 3


இந்த மூன்று பொருட்களையும் மிக்சியில் நன்கு அரைத்து, இதன் சாற்றை வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதை மாதவிடாயின் முதல் நாளில் குடித்தால், அடுத்த மாதவிடாய் சீராக வரும்.


குறிப்பு : கழற்சி காய் பருப்பினை தனியாக சாப்பிட கூடாது.


మరింత సమాచారం తెలుసుకోండి: