சென்னை:
சூப்பர் ஸ்டார் ரஜினி யாருக்கும் எதுவும் செய்வதில்லை என்ற குற்றசாட்டு விமர்சனத்தை பலரும் செய்து வருகின்றனர். ஆனால் அவர் செய்யும் நல்லவை வெளியில் தெரிவதில்லை.


விமர்சனம் செய்வது என்றால் நம்ம ஆளுங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல். அம்புட்டு நல்லா விமர்சனம் செய்வார்கள். இதில் சூப்பர் ஸ்டாராக இருந்தால் என்ன பவர் ஸ்டாராக இருந்தால் என்ன? ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்று அவர்கள் அறிய மாட்டார்கள்.


மக்களுக்கு பல உதவிகளை ரஜினி செய்து வருகிறார், அது வெளியில் தெரிவதே இல்லை. அவர் அதைப்பற்றி கூறியதும் இல்லை. இவர் சைலண்டாக செய்த ஒரு உதவி பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.


நேபாளில் உள்ள ஒரு பையன் யதேட்சையாக ரஜினியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த பையன் நன்றாக படிப்பவன். அவன் மேலே படிக்க பணமில்லாமல் கஷ்டப்படுவதை அறிந்த ரஜினி, அவனது முழுப்படிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளாராம். இப்படி அவர் வெளியில் தெரியாமல் செய்த உதவிகள் ஏராளம்...ஏராளம் என்பதுதான் உண்மை.


మరింత సమాచారం తెలుసుకోండి: