அண்மையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், வெற்றி பெற்ற நாசர், விஷால், பொன்வண்ணன், கார்த்தி உள்ளிட்ட  நிர்வாகிகள் நடிகர் சங்க முன்னேற்ற பணிகளில் தற்போது  தீவிரமாக செயல் புரிந்து வருகின்றனர். 


நடிகர் சங்க கட்டடம் கட்ட பணம் திரட்டுவதற்காக சமீபத்தில், இவர்கள் ஸ்டார் கிரிக்கட் விளையாட்டு போட்டி ஒன்றினை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நடத்தினர். இதில் மொத்தம் 9 கோடி வசூல் ஆகியது. 


நடிகர் சங்க கட்டடம் கட்ட 29 கோடி தேவைப்படுவதால், மீதி பணத்திற்காக நடிகர் விஷால், கார்த்தி, ஜெயம் ரவி,ஆர்யா ஆகிய நால்வரும் இணைந்து ஒரு புது படத்தில் சம்பளம் பெறாமல் நடிக்க முடிவு செய்துள்ளனர்.


இந்த படத்தில் நடித்து, இதை வெளியிடுவதன் மூலம் வரும் பெருந்தொகையை கொண்டு நடிகர் சங்க கட்டடம் கட்ட திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இயக்குனர் குறித்த தகவல்கள் எல்லாம் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: