சென்னை:
நடிப்புக்காக பயிற்சி எடுக்கிறார் ஜோதிகா என்ற தகவல் கோலிவுட்டில் சும்மா சுற்றி சுற்றி வருகிறது. 


முன்னணி நடிகையாக இருக்கும் போதே சூர்யாவை கல்யாணம் செஞ்சுக்கிட்டு பீல்டை விட்டு ஒதுங்கினார். பொறுப்பான குடும்பத்தலைவியாக மாறியவர் தேடி வந்த வாய்ப்புகளுக்கு மறுப்பு சொல்ல இப்படியே 8 வருடம் ஓடியே போய் விட்டது. 


அதுக்கு பிறகுதான் 36 வயதினிலே படத்தில் நடித்தார். எத்தனை வருடம் ஆனாலும் ஜோதிகா ஜோதிகாதான் என்பதை போல அவரது நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பின்னரும் அமைதியாக ஒதுங்கி இருந்த அவர் நல்ல கதைக்காக காத்திருந்தார் போலும். 


குற்றம்கடிதல் படத்தை இயக்கிய பிரம்மாவின் இயக்கத்தில்தான் நடிக்க உள்ளார். இதற்காக நடிப்பு பயிற்சி பெற இருக்கிறாராம் ஜோதிகா. நடிப்புக்கே நடிப்பா! விழிகளை அசைத்தே வெற்றி பெற்று விடுவாரே என்று கூறுகிறது கோலிவுட்.


మరింత సమాచారం తెలుసుకోండి: