'அரண்மனை-2' திரைப்படத்திற்கு பிறகு த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 'நாயகி' திகில் திரைப்படத்தின் ரீலீஸ் மீண்டும் ஒத்திப்போய் உள்ளது. இந்த படம் வரும் ஜூலை 15-ந்தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது இதன் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்து உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


இந்த படம் இன்னும் சென்சார் அதிகாரிகளிடம் இருந்து, சான்றிதழ் பெறாத காரணத்தால், இதன் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர். மேலும் இந்த படத்தின் தெலுங்கு வெர்சன் வரும் ஜூலை 15-ந்தேதி வெளிவருகிறது. 


இதோடு ஜூலை 29-ந்தேதி இந்த படம் தமிழிலும்  வெளிவரும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகார பூர்வத் தகவல்கள் மற்றும் இந்த படத்தின் சென்சார் அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: