இலங்கை:
ஜோதிடம் பார்க்கும் ஜோதிடருக்கே நேரம் சரியில்லை என்றால் அவர் என்ன செய்ய முடியும். அப்படிதான் இந்த விஷயம் நடந்துள்ளது.


என்ன விஷயம் என்கிறீர்களா? இலங்கை அதிபராக இருக்கும் மைத்ரி பால சிறிசேனா இன்னும் 6 மாதத்தில் இறந்து விடுவார் என பிரபல ஜோதிடர் விஜித் ரோஹனவிஜயமுனி கணித்து சொன்னதாக இலங்கை ஊடகங்களில் ஒரு செய்தி நேற்று பரபரப்பாக பேசப்பட்டது. 


அத்தோடு விட்டாரா அந்த ஜோதிடர்... சிறிசேனா இறந்த பின்னர் கோத்தபய ராஜபக்சேவே மீண்டும் இலங்கையின் அதிபர் ஆவார் என்று தரையிலும், தலையிலும் அடித்து சொல்லாத குறைதான்...


அதிபருக்கே... நேரம் குறித்தால் சும்மா இருக்குமா அரசு இயந்திரம்... 


அள்ளிக்கிட்டு வந்துவிட்டனர் ஜோதிடரை. தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தியதால் இப்போ... அந்த ஜோதிடர் கொழும்பு குற்றபுலனாய்வு பிரிவிற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.


அய்யா... நான் கூறியது வெறும் கணிப்பு தான் என்று இப்போது அவர் மூக்கால் அழுது வருகிறார். அப்படி சொன்னால் விட்டு விடுவார்களா. இப்போது அந்த ஜோதிடருக்குதான் நேரம் சரியில்லை போலும். நாக்கில் சனிபகவான் உட்கார்ந்து அவருக்கு ஆப்பு வைத்துள்ளார்.


ஒரு தரப்பினர் ஜோதிடரின் இந்த கணிப்புக்கு பின்னர் சில அரசியல்வாதிகள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாகவும் சொல்றாங்க... சொல்றாங்க... எப்படியோ... இப்போது அந்த ஜோதிடருக்கு கிரகச்சாரம் சரியில்லை என்பதுதான் உண்மை.


మరింత సమాచారం తెలుసుకోండి: