கேரளா:
அவர் சொன்னா இவங்க கேட்பாங்க... அதற்கான முயற்சிகளில் குதிப்போம் என்று அதிகாரிகள் முடிவெடுத்து இருக்காங்க... எதற்கு தெரியுங்களா?


விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் எந்த தமிழ் நடிகருக்கும் இல்லாத அளவிற்கு ரசிகர்கள் அதிகளவில் இருக்காங்க. இவர் படம் வருதுன்னா... அன்று கேரளாவே திமிலோகப்படும். அதிலும் பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடி என்ற பகுதியில் உள்ள கிராம மக்கள் தீவிர விஜய் ரசிகர்கள். இளைய தளபதிக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய துணிந்தவர்களாம்.


இந்தளவிற்கு தீவிரமாக இருக்கும் இவர்கள் யாருக்குமே படிப்பு என்றால் எட்டிக்காய்தான் போலும். படிப்பிற்காக அரசு வழங்கும் எந்த உதவியையும் தொடர்ந்து மறுத்தி வருகின்றனர். 


இவர்களின் ஒரே என்டெய்மென்ட் விஜய் படங்கள் பார்ப்பதுதான். தற்போது இதை வைத்தே இவர்களை வழிக்கு கொண்டு அதிகாரிகள் களத்தில் குதித்துள்ளார்களாம். அதாவது விஜய் சொன்னால் இவர்கள் கேட்பார்கள் என்பதால் நேரடியாக விஜயை சந்தித்து இவர்களின் வாழ்வு மேம்பாடு அடைய அவரை அழைத்து வந்து படிக்க சொல்ல வைக்கலாம் என்று யோசனையில் இருக்காங்களாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: