என்னங்க... சூர்யாவிற்கு, கார்த்தியின் மாமனார் தந்தையானார் என்றதும் ஒன்னும் புரியவில்லையா.... அதாவது... 


சூர்யா தற்போது 'எஸ்-3' படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. 


இதையடுத்து அவர் ப.ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் முத்தைய்யாவிற்கு ஓகே சொல்லியிருக்கிறாராம்.


'கொம்பன்' மற்றும் 'மருது' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய முத்தையா அடுத்து ஒரு புது திரைப்படத்தை இயக்கப்போகிறார். இதில் சூர்யா ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சூர்யாவிற்கு தந்தையாக ராஜ் கிரண் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.


மேலும் ராஜ் கிரண் ஏற்கனவே, 'கொம்பன்' திரைப்படத்தில் கார்த்திக்கு மாமனாராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: