ஓசூர்:
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பெண் ஒருவர் இறந்த சம்பவம் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதில் அன்னை சத்யா நகரில் 2 பேர் வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்டனர். அதில் பெண் ஒருவரின் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. மற்றொருவர் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 


கே.சி.சி.,நகர் மஞ்சுநாத் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது.


தியேரடபள்ளி ஏரி நிரம்பி தரைப்பாலத்துக்கு மேல் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. கே.சி.சி., நகரில் வீடுகளின் தரைத்தளத்தில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மாடிப்படிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: