தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களுள் ஒருவரான நா.முத்துக்குமார் இன்று காலை உடல்நல குறைவால் காலமானார். இவரது வயது 41. இவர் கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். 


இந்நிலையில், சென்னை அண்ணா நகரில், இன்று காலை 10 மணிக்கு இவர் உயிர் இந்த மண்ணை விட்டு பிரிந்துள்ளது. இவரது உடலுக்கு தற்போது திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


மேலும் அவர் உடல் தற்போது பொது மக்கள் பார்வைக்காக சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை அவரது இறுதி சடங்கு நடைபெறும் என தெரிகிறது. 


'வீரநடை' திரைப்படத்திற்கு பாடல் எழுதி, தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கிறார்.மேலும் 2 முறை தேசிய விருதும், பல முறை பிலிம் பேர் விருதுகளையும் வென்றுள்ளார். 


இவரது இழப்பு, தற்போது திரையுலகத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் இவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ் ஹெரால்டு சார்பில் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறோம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: