தமிழ் சினிமாவில் 90-ல் முன்னணி நடிகையாக வலம் வந்த பானு ப்ரியா தற்போது சினிமாவிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். ஆனால் இந்த முறை நாயகியாக இல்லை, அம்மா ரோலில் நடிக்க முடிவு எடுத்துள்ளார். 


'நெடுஞ்சாலை' திரைப்படத்தில் நடித்த ஆரி தற்போது 'நாகேஷ் திரையரங்கம்' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் அவருக்கு அம்மாவாக பானு பிரியா நடிக்கவுள்ளார். 


மறைந்த நடிகர் நாகேஷ், சென்னை பாண்டிபஜாரில் கட்டிய நாகேஷ் தியேட்டர் தற்போது கல்யாண மண்டபமாக இயங்கி வருகிறது. இதே போல் ஏராளமான தியேட்டர்கள் தற்போது அழிந்து வருகின்றன. இதை மையமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாகவுள்ளது.


மேலும் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: