சென்னை:
செய்ததை சொன்னா கோபம் ஏன் வருகிறது என்று கடுகடுக்கின்றனர் நெட்டிசன்கள். காரணம்... போதையில் விபத்தை ஏற்படுத்திய அருண் விஜய் எழுதியுள்ள கடிதம்தான்.


விஷயத்துக்கு போவோம்... போதையில் விபத்து ஏற்படுத்திய அருண்விஜய் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வந்தது. இவரை போதை நடந்த அன்றே நெட்டிசன்கள் போட்டு காய்ச்சி எடுத்தது மறக்க முடியாத ஒன்று.


தற்போது இந்த செய்திகளுக்கு எல்லாம் காட்டமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார் அருண்விஜய். அதில் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுங்களா? என்னுடைய நல விரும்பிகளுக்கு ஒரு விளக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. அதற்கு அவசியம் இல்லை, இதுபோன்ற முட்டாள்தனமான காரியத்தை நான் செய்ய மாட்டேன். (அப்போ... 2 நாளா... போதை தெளியாம படுத்துகிடந்தீங்களா அப்பு)


என்னிடம் எந்தவிதமான விளக்கத்தையும் கேட்காமல் என்னை பற்றிய தவறான தகவல்கள் வருகிறது. நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் என்பதை சட்டப்படி நிரூபிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். இந்த கடிதம் நெட்டிசன்களை மேலும் டென்ஷன் படுத்தி இருக்கிறது. 

Image result for arun vijay apology letter


మరింత సమాచారం తెలుసుకోండి: