சென்னை:
கொடூர கொலைக்காரன் ராம்குமாரால் வெட்டி சாய்க்கப்பட்டு துடிதுடித்து இறந்த சுவாதியின் ஈமகிரியைகள் திருச்சி பநீரங்கத்தில் செய்யப்பட்டுள்ளது. 


சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி கடந்த மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் வெட்டி கொலை செய்யப்பட்டார். சுவாதியின் தாய் ரங்கநாயகியின் சொந்த ஊர் திருச்சியில் உள்ள பநீரங்கம். 


சுவாதி கொலை செய்யப்பட்டதில் இருந்து மனம் நொந்து போய் கிடந்த சுவாதியின் தாய் ரங்கநாயகி, தந்தை சந்தானகோபால கிருஷ்ணன் ஆகியோர் நேற்று முன்தினம் பநீரங்கத்திற்கு வந்தனர். அங்கு உறவினர் வீட்டில் தங்கினர். இந்நிலையில்தான் சுவாதியை கொலை செய்த கொலையாளி கைது செய்யப்பட்டான்.


இந்நிலையில் தனியார், 'டிவி' கேமராமேன்கள் சுவாதியின் உறவினர் வீட்டை முற்றுகையிட்டனர். சுவாதியின் ஈமகிரியை செய்ய வந்துள்ளதால் தங்களை சற்று விட்டு விலகி இருக்குமாறு சுவாதி பெற்றோர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஊடகங்கள் அங்கிருந்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மகளை இழந்த வேதனையில் இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீஸ் பாதுகாப்புடன் பநீரங்கம் வடக்கு வாசல் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை விஷ்ணு பாதம் கட்டடத்துக்கு சென்றனர்.


அங்கு, சுவாதியின் தந்தை ஈமக்கிரியைகள் செய்தார். இன்று சுவாதிக்கு, 10ம் நாள் காரியங்களை செய்ய திட்டமிட்டுள்ளனர். மகள் நன்றாக வாழ வேண்டியதை பார்க்க வேண்டிய பெற்றோர் கண்ணீர் மல்க ஈமகிரியைகள் செய்ததை பார்த்த பொதுமக்களும் கண்ணீர் விட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


మరింత సమాచారం తెలుసుకోండి: