அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில், கோவை அருகே உள்ள ஆனைகட்டி செல்லும் வழியில் உள்ளது. இத்தளத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். 


மேலும் இடும்பன் சன்னதி, விநாயகர், சிவபெருமான் அருணாசலேசுவரராக, ஆஞ்சிநேயன்,முருகனின் படைத்தளபதி வீரபாகு ஆகியோர் சன்னதிகளும் உள்ளன. 500 படிக்கட்டுகள் ஏறினால் இக்கோயிலை அடையலாம். 


திருமணத்தில் தடை ஏற்படுபவர்கள், சுவாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும்  என்பது பக்தர்களின் நம்பிக்கை. 


மேலும் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், 5 செவ்வாய் கிழமை இத்தளத்திற்கு வந்து வழிபட்டால், நினைத்தது நடக்கும். மன நோய் மற்றும் தோல் நோயால் அவதிப்படுபவர்களும் இங்கு வந்து வழிபட்டால் நோய்கள் குணமடையும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: