மயக்க மருந்து தூவி வீட்டுப் பெண்களின் கூந்தலை வெட்டிச் செல்லும் மர்ம கும்பலின் கேவலமான அட்டகாசத்தால் ஹரியானா மற்றும் டெல்லி பெண்கள் மத்தியில் கடும் பீதி நிலவுகிறது. இது தொடர்பாக புகார்கள் போலிசாரிடம் குவிவதால் போலீசார் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

Image result for hair chopping in haryana

வீடுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் செல்லும் கொள்ளைக்காரர்கள் மத்தியில், பெண்களின் மயிரை வெட்டிச் செல்லும் வினோத கொள்ளை கும்பலின் அட்டகாசம் டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில்  தற்போது அதிகரித்துள்ளது.

Image result for hair chopping in haryana


ஹரியானா மற்றும் டெல்லியின் எல்லையோர கிராமங்களில் முன்பின் அறிமுகமில்லாத மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் குர்ஹாம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் 'கூந்தலை முடியைக் காணோம்' என்று காவல்நிலையத்தில் தினமும் புது புகார்கள் அளித்து போலீசாரை திணறடித்து வருகிறார்கள். இந்த கூந்தல் திருட்டு சம்பவத்தில் பாதிக்கப்படும் நிலை உள்ளதால், வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் கடும் பீதி நிலவுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: