ராஞ்சி :
19 ஆண்டு காலமாக முறியடிக்கப்படாமல் இருந்த சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். யார் என்று கேட்கிறீர்களா?


சொல்லிடுவோம்... 70-வது தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் நடந்தது. இதில்தான் இந்த சாதனை முறியடிப்பு சாதனை நடந்துள்ளது.


பெண்களுக்கான 200 மீட்டர் பிரஸ்ட்டிரோக் பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை சலோனி தலால் 2 நிமிடம் 44.37 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். அதுமட்டுமா புதிய தேசிய சாதனையையும் படைத்தார். 


இதற்கு முன்பு இந்த பந்தயத்தில் கர்நாடக வீராங்கனை சஜானி ஷெட்டி 2 நிமிடம் 46.39 வினாடியில் கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. 19 ஆண்டு காலமாக முறியடிக்கப்படாத இந்த சாதனையை தற்போது சலோனி தலால் தகர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். இதை முறியடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ...?



మరింత సమాచారం తెలుసుకోండి: