சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மூன்று ஆண்டுகளாக நடித்து வரும் படம் டூ பாய்ண்ட் ஓ. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இயக்குனர் ஷங்கரின் படமான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. சென்ற ஆண்டு தீபாவளிக்கே வெளியாகியிருக்க வேண்டியா டூ பாய்ண்ட் ஓ தள்ளி பொய் இந்த ஆண்டு குடியரசு தின ரிலீஸ் என்று சொல்லப்பட்டது.



ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் முடியாத காரணத்தால் மீண்டும் தள்ளி போனது. இந்நிலையில் கடைசியாக படத்தை கிராபிக்ஸ் வேலைகள் எல்லாவற்றையும் முடித்து நவம்பர் இருபத்தி ஒன்பதாம் தேதி வெளியிட முடிவெடுத்துள்ளனர். இப்பொழுது முதல் கட்டமாக படத்தின் அதிரடியான டீசரை வரும் பதிமூன்றாம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட உள்ளனர்.



டூ பாய்ண்ட் ஓ படத்தில் அக்ஷய் குமார் சரோ மென் என்ற காக்கை மனிதன் அவதாரத்தில் மிரட்ட உள்ளார். மேலும் ரஜினி முதல் பாகத்தை போலவே சைன்டிஸ்ட் வசீகரன் மற்றும் ரோபோ சிட்டி என ரெட்டை வேடத்திலும் அவருக்கு ஜோடியாக கவர்ச்சி கன்னி ஏமி ஜாக்சனும் நடித்துள்ளனர். 


మరింత సమాచారం తెలుసుకోండి: