புதுடில்லி:
நாமளோ வெளியூரில் இருக்கோம்... மனைவியோட சிரிக்க முகத்தை பார்க்கலாம்னு படம் எடுத்து அனுப்ப சொன்ன கணவர் இப்ப டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பி இருக்காராம். என்னங்க இது கூத்துன்னு கேட்கறீங்களா?


வெளியூரில் இருக்கும் கணவர் தனது மனைவியின் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டு போட்டோ எடுத்து அனுப்பும்படி கேட்டுக்கொண்டுள்ளார். அடடா கணவர் கேட்டுட்டாரேன்னு உடனே சிரித்த முகத்துடன் போட்டோ எடுத்து தனது கணவனுக்கு அனுப்பினார் மனைவி.


அதனை ரசித்து பார்த்து கொண்டிருந்த கணவன் திடீரென செம காண்டாகி தனது மனைவியை உடனடியாக டைவர்ஸ் செய்ய வேண்டுமெனக் கேட்டு வக்கீலிடம் போயிருக்கார். காரணம் கேட்ட வக்கீலுக்கு, அந்த படத்தைக் காட்டியுள்ளார்.


அடப்பாவி... நல்லா சிரிச்ச முகத்தோடு குடும்ப குத்துவிளக்காட்டாம் இருக்கிற இந்த பொண்ணை ஏன்யா டைவர்ஸ் செய்யறன்னு வக்கீல் கேட்க... போட்டோவை பெரிதாக்கி மெத்தைக்கு அடியில் ஒருவன் ஒளிந்திருப்பதை கணவன் காட்ட வக்கீலுக்கு வாயடைத்து போய்விட்டது.


நல்லவேளை ஸ்ட்ராங்கான ஆளா இருந்ததால தப்பிச்சார்... இல்லே நெஞ்சடைத்து போயிருந்தால் வக்கீல் வாயை பிளந்து இருப்பார். இந்த கூத்தை என்னவென்று சொல்வது.


మరింత సమాచారం తెలుసుకోండి: