ஸ்லோவாக்கியா:
பறக்கும் கார்... கார்... ஏரோமொபில் 3.0 என்ற பறக்கும் காரை 2018-ம் ஆண்டு அறிமுகம் செய்ய உள்ளோம் என்று ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனம் தெரிவித்துள்ளது.


சாலையில் செல்லும் கார் போன்ற அமைப்பை கொண்ட இந்த ஏரோமொபில் 3.0 பறப்பதற்கு ஒரு சுவிட்சை தட்டினால் போதுமாம். அவ்வளவுதான் இறக்கைகள் கொண்ட காராக மாறி பறக்க ஆரம்பித்துவிடுமாம்...


 மினி ஹெலிகாப்டர் போல இது மினி கார். இந்த காரில் 2 பேர் தாங்க போக முடியும். இந்த காரின் விலை ரூ.1.5 கோடி முதல் ஆரம்பமாகிறது.


அடுத்த ஆண்டு முதல் முன்பதிவை தொடங்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பி பறந்து செல்லக்கூடிய கார் என்பதால், கட்டாயம் இது அனைவரையும் ஈர்க்கும் என்று நம்புகின்றனர். 


எளிதாக தரையிறக்கவும், தரையிலிருந்து வானில் பறக்கவும் முடியுமாம். விமானம் போல் அல்லாமல் ஹெலிகாப்டரைப் போல் இயங்க கூடியதாம். வரட்டும்... வரட்டும்... பறக்க வரட்டும்...


మరింత సమాచారం తెలుసుకోండి: