சீனா:
கண் இமையில் இப்படியா... அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டனர் டாக்டர்கள். எதற்காக தெரியுங்களா?


சீனாவில் 5 வயது சிறுமியின் கண் இமையில் பேன்கள் கூடு குடும்பம் நடத்தி முட்டை பொறித்திருப்பதை கண்டுதான் டாக்டர்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. இருக்காதா பின்னே...


 சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் 5 வயது சிறுமி கண் அரிப்பு, எரிச்சலாலும் அவதிப்பட அவரது தாய் கண் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். 


அந்த சிறுமியின் கண்ணை டாக்டர்கள் மைக்ரோஸ்கோப் கருவி மூலம் சோதனை செய்ய அப்போதுதான் அந்த அதிர்ச்சி நடந்துள்ளது. அப்போது சிறுமியின் கண் இமையில் பேன்கள் கூடு கட்டி இருந்தது தெரியவந்தது. 


 உடனடியாக அதை மருத்துவர்கள் அகற்றினர். அதில் 9 பேன்களும் 20 முட்டைகளும் இருந்து உள்ளது. சுகாதாரமாக இல்லாததால் இது ஏற்பட்டு உள்ளது. இதனால் கண் பார்வை இழக்கக்கூடும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கண் இமையில் கூடுக்கட்டி குடும்பம் நடத்தி உள்ளதே பேன்கள்!


మరింత సమాచారం తెలుసుకోండి: