இயக்குனர் கவுதம் மேனன், சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' மற்றும் தனுஷ் நடித்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' ஆகிய இரண்டு திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படங்களின் பின்தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெறுகின்றன. 


இதையடுத்து அவர் தனது 'ஒன்றாக என்டேர்டைன்மெண்ட்' சார்பில், ஜெயம் ரவி, பிரித்விராஜ், புனீத் ராஜ்குமார், சாய் தரம் தேஜ், அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடிக்கவுள்ள புது திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்குகிறது. 


அதற்கிடையில் கவுதம் மேனன், சந்தானத்தை வைத்து ஒரு புது படம் இயக்க முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் ஒப்பந்தமாகிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இதுகுறித்த அதிகார பூர்வத்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


மேலும் சந்தானம், செல்வராகவன் இயக்கத்திலும் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



మరింత సమాచారం తెలుసుకోండి: