நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் போடா போடி படத்தின் மூலமாக அறிமுகம் ஆனார். நன்றாக இருந்தாலும் அந்த படம் ஓடவில்லை. இதனை அடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார். தேசிய விருது இயக்குனரான பாலாவின் படமாகிய தாரை தப்படையில் கூட இவர் தான் சூறாவளி என்ற கதாநாயகி வேடத்தில் கவர்ந்தார்.



இருந்தாலும் அந்த படமும் பிளாப். மலையாள கரையோரம் ஒதுங்கி மம்முட்டி ஜோடியாக கசாபை என்ற படத்தில் ஒரு விலை மெதுவாக நடித்தார். அந்த படம் வசூல் வெற்றி என்றாலும் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் அமையவில்லை.இதனை ஆண்டுகளில் தமிழில் வரலக்ஷ்மி நடித்து வெற்றி அடைந்த ஒரே படம் விக்ரம் வேதா தான்.



அதிலும் அவர் ஹீரோயின் எல்லாம் இல்லை. இந்நிலையில் தான் ஹீரோயினாக நடித்து ஒன்றும் மாறவில்லை என்று அதிரடியாக சண்டக்கோழி டூ படத்தில் காதலர் விஷாலையே எதிர்க்கும் முரட்டு வில்லியாக பேசி என்ற வேடத்தில் நடித்துள்ளார்.



லிங்குசாமி இயக்கத்தில் ஆக்டொபர் பதினெட்டாம் தேதி வெளியாகும் இந்த படத்தின் ரிசல்ட்டை வரலக்ஷ்மி ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார். பார்க்கலாம் வரலக்ஷ்மி அவரது தந்தை சரத்குமாரை போலவே வில்லத்தனமான வேடங்களில் கலக்குவாரா என்று. 


మరింత సమాచారం తెలుసుకోండి: