சென்னை:
அவர்தாங்க... அவர் மட்டும்தாங்க நம்பினார் என்று தன் நினைவுகளை சொல்லியுள்ளார் பிரபல இயக்குனர்.


தீனாவில் ஆரம்பித்து கத்தி, துப்பாக்கி என்று இயக்கிய படங்களை எல்லாம் வெற்றிப்படங்களாக கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர்தான் தனது நினைவுகளை இப்படி பதிவு செய்துள்ளார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.


சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி இவர் பழசை மறக்காதவர் என்பதை நிரூபித்துள்ளது. என்ன்னனா? ‘நான் இயக்குனராக அறிமுகமான போது என்னை நம்பி கதை கேட்டது அஜித் மட்டும் தான்.


வேறு எந்த நடிகரும் அந்த நேரத்தில் புதிய இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்க தயங்குவார்கள்’. ஆனால் அஜித் கொடுத்த வாய்ப்பு இப்போது என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: