தென்னிந்திய சினிமாவின் முன்னணி பாடகராக திகழும் ஜெ.யேசுதாஸ் வீட்டில் தற்போது பூகம்பம் வெடித்துள்ளதாம். விஷயம் என்னவென்றால்...


கடந்த 2007-ம் ஆண்டு, யேசுதாஸின் மகனும் பாடகருமான விஜய் யேசுதாஸ், தர்ஷனாவை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அவர்களுக்கு அம்மியா என்ற பெண் குழந்தையும்,ஆவியான் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. 


இதனை தொடர்ந்து, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்கள் வாழ்க்கையில் சில பிரச்சனைகளால், விரிசல் ஏற்பட்டு, தற்போது விவாகரத்துக்கு வந்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. 


விஜய் யேசுதாசும், தர்ஷனாவும் பரஸ்பரமாக பிரிய முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 


சமீபத்தில் தான் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா, கணவரை பிரிந்து வாழ முடிவு செய்தார் என்பதை பார்த்தோம். இதையடுத்து விஜய் யேசுதாஸ் - தர்ஷனா, பிரிய முடிவு செய்திருப்பது, மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. 



మరింత సమాచారం తెలుసుకోండి: