'ரா ரா', 'சந்த மாமா' திரைப்படத்தில் நடித்த சுவேதா பாசு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, விபச்சார வழக்கில் சிக்கி, கைதி செய்யப்பட்டார். இதையடுத்து இரண்டு மாதம் சிறையில் தண்டனை பெற்று, வெளியே வந்து, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். 


அவர் ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷ்யபிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சுவேதா உடன் இணைந்து பணியாற்றும் இளம் இயக்குனர் ரோஹித் மிட்டலுக்கும், அவருக்கும்  இடையே தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன.  


ஆனால் இதற்கு பதில் சொல்லாமல் இருந்த சுவேதா பாசு தற்போது இதை ஒத்து கொண்டார். சமீபத்தில் நடைபெற்ற விழாவில் சுவேதா பங்கேற்ற போது, நானும் ரோஹித்தும் இரண்டு ஆண்டுகள் காதலித்து வருகிறோம், இன்னும் திருமணம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று  அவர் தெரிவித்தார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: